;

பாடல்கள்

Monday, November 23, 2009

உலக அப்பாக்களுக்குத் தமிழே தாய்

தற்குமுன் எழுதிய ‘இந்தியாவின் பழமையான மொழி சமற்கிருதம்’ என்ற தலைப்பிலான இடுகையில் ஒரு செய்தி இடம்பெற்று இருந்தது. அதாவது, தமிழே உலகத்தின் மூத்த மொழி - முதல் மொழி. அதற்கு சில அடிப்படை சான்றுகள் பட்டியலிடப்பட்டிருந்தன. அதில்,

//8.தாய் தந்தையரைக் குறிக்கும் தமிழ் முறைப்பெயர்கள், ஏறத்தாழ எல்லா மொழிகளிலும் திரிந்தும் திரியாதும் வழங்கி வருதல்.// என ஒரு சான்று இருந்தது. இதனை விரிவாக இந்த இடுகையில் காண்போமா?


‘அப்பா’ என்ற தமிழ்ச்சொல் இன்று உலகித்தின் பல மொழிகளில் நேரடியாகவும் – மருவியும் – திரிந்தும் – சிதைந்தும் வழங்கிவருகின்றது என்ற செய்தி வியப்பிற்குரிய ஒன்று. தமிழ்மொழியின் தொன்மைக்கும் – முதன்மைக்கும் – தாய்மைக்கும் – தலைமைக்கும் இதுவொரு மிகச் சிறந்த சான்றாதாரம் அல்லவா?

உலகத்தின் மூத்த மொழியாகவும் முதல் மொழியாகவும் இருப்பதற்கு தமிழுக்கு இருக்கும் தகுதியை நிறுவுதற்கு இதுவொன்றே போதுமல்லவா?

சரி வாருங்கள், ‘அப்பா’ என்கிற தமிழ்ச் சொல் உலக மொழிகளில் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது – மருவியிருகிறது என்று பார்ப்போம்.

தமிழ்:- அப்பன் // மலையாளம்:- அப்பன் // கன்னடம்:- அப்ப // துளு:- அப்ப // குடகு:- அப்பெ // கோண்டி:- ஆப்போ // துளு:- அப்பெ(தாய்) //

மராத்தி:- பாப் // குசராத்தி:- பாப் // இந்தி:- பாப் // வங்கம்:- பாப், பாபா //

மெச்சு:- அப்ப // போர்த்துக்கீசியம்:- அப // சிங்களம்:- அப்பா

எகிப்து:- ஆப் // அரபி:- ஆப் // கலதேயம்(Chaldean):- அப்பா // சீரியம்(Syriac):- ஆபோ // அரமிக்கு(Aramic):- அப்பா // அபிசினியம்:- ஆப்பாத்

இலத்தின்:- பப்பா // பிராகுவீ:- பப்பா // ஆங்கிலம்:- பப்பா

ஓசித்தியம்(Ostiak):- ஊப், ஓப் // பின்னியம்(Finnish):- அப்பி // அங்கேரியம்:- இப், இப்ப, அப்பொஸ்

அப்பாவுக்கு தமப்பன், தகப்பன், அத்தன் என்றும் தமிழில் சொற்கள் உள்ளன. இவை எவ்வாறு பிற மொழிகளில் திரிந்துள்ளன என இனி காண்போம்.

தமிழ்:- தம்+அப்பன்= தமப்பன்= தகப்பன்.

தமிழ்:- அத்தன். // பிராகிருதம்:- அத்தா

துருக்கி:- அத்த // அங்கேரியம்:- அத்ய // பின்னியம்(Finnish):- ஆத்த // செர்மியம்(Chermiss):- ஆத்யா // மார்தூவின்:- அத்தை // ஓசித்தியம்(Ostiak):- அத்த // இலாப்பியம்(Lappish):- அத்ஜெ(பாட்டன்)

கோதியம்(Gothic):- அத்தன் // இலத்தின்:- அத்த // கிரேக்கம்:- அத்த

அத்தன் என்பதைப் போலவே அச்சன் என்பதும் தமிழ் சொல்தான். இந்த ‘அச்சன்’ இன்று மலையாளத்தில் அப்படியே இருக்கிறது. அச்சன் என்ற சொல் மற்ற தென்னிந்திய மொழிகளில் எப்படி மாறியிருக்கிறது பாருங்கள்.

தமிழ்:- அத்தன்= அச்சன் // மலையாளம்:- அச்சன்

கன்னடம்:- அஜ்ஜ(பாட்டன்) // துளு:- அஜ்ஜெ(பாட்டன்) // குடகு- அஜ்ஜெ(பாட்டன்) // குருக்கு:- அஜ்ஜொஸ்(பாட்டன்) // பிராகிருதம்:- அஜ்ஜ // மராத்தி:- ஆஜா(பாட்டன்) // இந்தி:- ஆஜா(பாட்டன்)

இலாப்பியம்(Lappish):- ஐஜ. அத்ஜ(பாட்டன்)

அப்பாவை ஐயன் என அழைக்கும் பழக்கமும் தமிழருடையதே. ஐயன் என்பது அப்பாவை மட்டுமல்லாது தமையன், பெரியோன், ஆசிரியன், குரு, முனிவன் என பல பொருளையும் குறிக்கிறது.

தமிழ்:- ஐயன் // மலையாளம்:- அய்யன் // கன்னடம்:- அய்ய // தெலுங்கு:- அய்ய, அய // துளு:- அய்யெ(ஆசிரியன்) // குடகு:- அய்யெ(தந்தையுடன் பிறந்தான்) // துடவம்:- இன், எயி // கோலாமி:- அய்யா(பாட்டன்), பஅய்ய

போர்த்துக்கீசியம்:- ஐயோ(ஆசிரியன்)

தமிழ்:- தந்தை // கன்னடம்:- தந்தெ // தெலுங்கு:- தண்ட்ரி

இப்படியாக, அப்பாவைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள் உலக மொழிகள் பலவற்றிலும் அப்படியே இருக்கிறது அல்லது ஓரளவு மாற்றமடைந்து காணப்படுகிறது. இதிலிருந்து தமிழ்மொழி உலக மொழிகளுக்கெல்லாம் சொற்களை வழங்கி தாய்மைத் தன்மையைப் பெற்று - உலக மொழிகளுக்குத் தாயாக - தாய்மொழியாக இருப்பது தெள்ளென தெரிகிறது.

தமிழே ஞாலத்தின் முதற்றாய்மொழி என்பதை நமது இன்னுயிர் தமிழ்மொழி இன்றும் இனிவரும் காலத்திற்கும் தானே நிறுவிக்கொள்ளும் என்பதை இனி சொல்லவும் வேண்டுமா?

மூலம்:-

திருத்தமிழ்

மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர், தமிழ் வரலாறு

தமிழ்த்தாய் பெற்றெடுத்த உலகத்தின் அம்மாக்கள்

த்தாய் பெற்றெடுத்த உலகத்தின் அம்மாக்கள்



ருமுதுகுரவர் என்பது தாய் தந்தை இருவரையும் குறிக்கும் தமிழ்ச் சொல்லாட்சி. உலக மொழிகளை மூன்று முகமையான குடும்பங்களில் வகைப்படுத்துகிறார்கள். இந்த மூன்று மொழிக்குடும்பங்களிலும் இருமுதுகுரவரின் பெயர்கள் தமிழாகவே இருக்கின்றன அல்லது தமிழின் திரிபாக இருகின்றன. இதிலிருந்து, பழமையான உலகமொழிகளுக்குத் தமிழ் சொற்கொடை வழங்கியிருக்கிறது என்பது தெரியவருகிறது. அதுமட்டுமல்லாம், தமிழ் பல பழமையான மொழிகளுக்குத் தாயாக இருந்திருப்பதும் தெரியவருகிறது.

‘உலக அப்பாக்களுக்குத் தமிழே தாய்’ என்ற கடந்த பதிவில் ‘அப்பா’ எனும் தமிழ்ச்சொல் உலகமொழிகளில் எவ்வாறு வழங்கிவருகிறது என்று கண்டோம். அதுபோலவே, இந்த முறை அதோபோல ‘அம்மா’ எனும் தமிழ்சொலின் பரவலைக் காண்போம் வாருங்கள்.

தமிழில் அம்மாவை குறிக்கும் சொற்கள் அம்மை, அம்மன் ஆகியன. தமிழர் வழிபடும் பெண்தெய்வத்திற்கும் இப்பெயரை இட்டுள்ளனர். இச்சொற்கள் பிறமொழிகளில் ஆளப்படுகின்றன.

தமிழ்:- அம்மை(தாய்), அம்மன் (காளி, பெண்தெய்வம்)

மலையாளம்:- அம்ம, உம்ம // கன்னடம்:- அம்ம, தெஅம்ம, கோஅம்மன்(தெய்வம்), குஅம்மெ, துஅம்ம // கோலாமி:- அம்ம, நாஅம்ம // பிராகுவீ:- அம்மா // துளு:- அம்மெ(தந்தை).

குசராத்தி:- மா // இந்தி:- மாம் // வங்காளம்:- மா.

திபேத்தியம்:- ம, மொ // மலாய்:- அமா, எமா // சீனம்:- மா.

சமாயிதம்(Samoiede):- அம்ம // செனசெய்(Jenesei):- அம்ம // அம் // எசுத்திரியன்(Estrian):- எம்ம // பின்னியம்(Finnish):- எமா // அங்கேரியம்:- எமெ // சிந்தி:- அமா.

எபிரேயம்:- ஏம் // அரபி:- உம் // சீரியம்(Syriac):- ஆமோ.

ஐசிலாந்தியம்:- அம்ம(பாட்டி) // பழஞ்செருமானியம்:- அம்ம // செருமானியம்:- அம்மெ(செவிலி) // ஆசுக்கன்(Oscan):- அம்ம // ஆங்கிலம்:- மம்ம, மம் // பிரெஞ்சு:- மமன் // இசுபானியம்(Spanish):- மம // கிரேக்கம்:- மம்ம, மம்மெ // சமற்கிருதம்:- அம்மா, அம்பா.

அம்மை என்பது அவ்வை என தமிழில் மருவியொலிக்கும். தாய், பாட்டி என்பன இவற்றின் பொருள்கள்.

தமிழ்:- அம்மை = அவ்வை

கன்னடம்:- அவ்வ, அவ்வெ(தாய், பாட்டி, கிளவி) // தெலுங்கு:- அவ்வ // துளு:- அப்பெ(ஆயா) // குடகு:- அவ்வெ // கோலாமி:- அவ் // துடவம்:- அவ் // பர்சி:- அவ்வ(பாட்டி) // கோண்டி:- அவ்வல்.

இலத்தின்:- அவுஸ்(பாட்டன்), ஆவிய(பாட்டி), அவ்-உங்குளுஸ்(அம்மான்)

அம்மாவைக் குறிக்கும் மற்றொரு தமிழ்ச்சொல் அன்னை என்பது அறிந்ததே. இதன் பரவலை இனி பார்ப்போம்.

தமிழ்:- அம்மை, அன்னை

இந்தி:- அன்னி(செவிலி)

துருக்கி:- அன்ன, அன // ஒசித்தியம்(Ostiak):- அனெ, மா, அனை // அங்கேரியம்:- அன்ய, பின்அன்ய.

அபிசினியம்:- இன்னத் // ஓசித்தியம்(Ostiak:- இன(பெண், மனைவி).

அத்தி, ஆத்தி, ஆத்தை என்பனவும் அம்மாவைக் குறிக்கும் தமிழ்சொற்களே. பழந்தமிழில் இவற்றைக் காணலாம். இன்றும் மக்கள் வழக்கில் இவை உள்ளன. எதையாவது வியந்து சொல்லும்போது பெண்கள் ‘அடியாத்தி’ என்று சொல்லுவதைக் கவனிக்கவும்.

தமிழ்:- அத்தி, ஆத்தி, ஆத்தை

மலையாளம்:- ஆத்தோள் // சிங்களம்:- அத்தா(அம்மாய்) // பின்னியம்(Finnish):- ஐத்தி

கோதியம்(Gothic):- ஐத்தின் // சமற்கிருதம்:- அத்தா(தாய், அக்கை, பெரியதாய்), அத்தி(அக்கை).


அம்மாவை அத்தி, அச்சி, ஆச்சி என அழைக்கும் வழக்கமும் தமிழரிடம் உண்டு. பாட்டியை ஆச்சி என இன்றும் அழைக்கின்றனர்.

தமிழ்:- அத்தி, அச்சி, ஆச்சி.

மலையாளம்:- அச்சி, ஆச்சி(தாய், செவிலி) // கன்னடம்:- அச்சி(தாய்), அஜ்ஜி(பாட்டி) // துளு:- அஜ்ஜி(பாட்டி) // குருக்கு:- அஜ்ஜீ(பாட்டி) // மலாய்:- மாச்சி

தமிழ்:- அக்கை, (தாய், தமக்கை), அக்காள்(தமக்கை), அக்கை = அக்கன்.

கன்னடம்:- அக்க // தெலுங்கு:- அக்க // துளு:- அக்க, அக்கெ // கோத்தம்:- அக்ன // துடவம்:- ஓக்ன் // குடகு:- அக்கெ.

மராத்தி:- அக்கா // இலத்தின்:- அக்கா(தாய்) // சம்ற்கிருதம்:- அக்கா(தாய்), மங்கோலியம்:- அக்கு(அண்ணன்) // துங்குசியம்:- அக்கி(அண்ணன்)

தமிழ்:- ஆய் // மராத்தி:- ஐய // பிராகுவீ:- ஐய // போர்த்துக்கீசியம்:- ஐய(செவிலி) // ஆங்கிலம்:- ஆயா(செவ்லி) // மலாய்:- ஆயா(அப்பா)

இத்தனையும் பார்த்தோம். இனி, தாய் என்பதைக் காண்போம்.

தமிழ்:- தாய் // மலையாளம்:- தாய் // கன்னடம்:- தாய் // தெலுங்கு:- தாயி.

தமிழ்:- தள்ளை // மலையாளம்:- தள்ள // தெலுங்கு:- தல்லி // பர்சி:- தல்.



இப்படியாக, உலக மொழிகள் பலவற்றிலும் தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன என்பதை இன்றை சொல்லாராய்ச்சித் துறை (Etimology) ஏற்றுக்கொண்டிருக்கிறது. மேலை நாடுகளில் வெளியிடப்பெறும் வெப்சுதர்(Webster) முதலான சொல்லாராய்ச்சி அகரமுதலிகள் உலகமொழிகளில் காணப்படும் தமிழின் தடங்களையும் மூலங்களையும் மறைக்காமல் – மறுக்காமல் பறைசாற்றிக் கொண்டுதா இருக்கின்றன. ஆனால் பாவம், தமிழன்தான் தன் மொழியின் பெருமையை அறியாமல் இருக்கின்றான்.
அதனால், எங்கும் - எதிலும் - எப்போதும் தன்னைத் தாழ்வாகவே எண்ணுகின்றான். தன்மொழி உணர்வே தமிழனுக்கு தன்னம்பிக்கையும் தன் இனமான உணர்வையும் கொடுக்கும். அதுவொன்றே, தமிழனைத் தலைநிமிர்ந்து வாழவைக்கும்.
மூலம்:-

திருத்தமிழ்

மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர், தமிழ் வரலாறு



Wednesday, November 04, 2009

ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ஆம் நாள், மாவீரர் வாரத்தின் இறுதி நாள்





ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ஆம் நாள் , மாவீரர் வாரத்தின் இறுதி நாள்; தாயக விடுதலைக்காக தம்முயிரினை ஈந்த மாவீரர்களின் புனிதக் கல்லறைகளில் சிரந்தாழ்த்தி, மலர்தூவி, ஒளிதீபமேற்றும் உன்னதநாள்; நம் தாயக விடுதலைக்காக இதுவரை நாம் இழந்தவற்றை மீள்நினைத்து இழந்த மாவீரர்களின் இலட்சியக் கனவினை ஈடேற்ற அவர் வழிச்சுவடு தொடருவோம் என உறு...தியெடுத்துக் கொள்ளும் வீரநாள்; ஈழத்தமிழர்கள் அனைவரிற்கும் ஒரு எதிர்பார்ப்பினைக் கொடுக்கும் நாள்; அன்றுதான் நம் தேசியத்தலைவர் அவர்களின் கருத்துக்களை அவரது உரையின் வாயிலாக நாம் அறிந்து கொள்ளும் அரிய நாள்.