;

பாடல்கள்

Saturday, September 26, 2009

இனியத் தமிழ் ஏடு; இலவய இதழ் - புதிய உதயம்




‘உயதம்’ என்ற பெயரில் மலேசியாவில் ஒரு தமிழ் இதழ் வெளிவந்தது, உங்களுக்குத் தெரியுமா? 1970, 80களில் தமிழ் மக்களிடையே அதிகம் வாசிக்கப்பட்ட இதழ் இந்த உதயம்.

நாட்டின் மூத்த ஊடகவியலாளரும் இப்போது மக்கள் ஓசை நாளிதழின் மூத்த செய்தியாளராகவும் இருக்கும் ஐயா எம்.துரைராஜ், வழக்கறிஞர் ஐயா பொன்முகம், திரு.தேவராஜ் முதலானோர் அன்றைய உதயம் இதழின் ஆசிரியர்களாக இருந்து பணியாற்றியவர்கள்.

அரசாங்கத்தின் கருத்துப் பரப்புரை ஏடாக இருந்ததோடு அல்லாமல், தமிழுக்கும் வளம் சேர்க்கும் வகையில் நல்லதோர் இலக்கிய ஏடாகவும் உதயம் வார்த்தெடுத்தப்பட்டது – வளர்த்தெடுக்கப்பட்டது.

ஏனோ தெரியவில்லை? என்ன காரணமோ புரியவில்லை? மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்த அந்த அருமை இதழ் நின்றுபோனது; அது பரப்பிய செந்தமிழ் மணம் மறைந்துபோனது. உதயத்தின் மறைவு அன்று பல்லாயிரம் மனங்களில் ஆறாத்துயரை மாறாநினைவாக விட்டுச்சென்றது – விதைத்துச் சென்றது என்பது வரலாறு.

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் உதயமாகி இருக்கிறது அந்த அரசாங்க ஏடு. மலேசியத் தகவல் திணைக்களம் (Jabatan Penerangan Malaysia) இப்போது மீண்டும் இந்த இதழை வெளியிடத் தொடங்கியிருக்கிறது. இப்போது இதன் பெயர் “புதிய உதயம்”.

முழுக்க முழுக்க தமிழில் இவ்விதழ் வெளிவருகிறது; இலவயமாக வழங்கப்படுகிறது. நான்கு வண்ணத்தில் – தரமான வழவழப்புத் தாளில் – புதியவகை அச்சமைப்பில் - மிகவும் நேர்த்தியாக – பொழிவான தோற்றத்தில் – பார்ப்போர், படிப்போர் கவனத்தையும் கருத்தையும் பட்டென கவரும் வகையில் ‘புதிய உதயம்’ வெளியிடப்படுகிறது.

முற்றிலும் புதிய தோற்றத்தில் புதுமை அமைப்பில் புதுப்புது செய்திகளைத் தாங்கி ‘புதிய உதயம்’ மீண்டும் தமிழ்மணம் பரப்ப வந்திருக்கிறது; வாராது வந்த மாமணியாய் தமிழ் மக்களின் அறிவுப்பசிக்கு நல்விருந்தாக அமைந்திருக்கிறது.

இந்த 2009இல் இதுவரை மூன்று இதழ்கள் வெளிவந்துவிட்டன. தற்போது, திருமதி பத்மா செல்வராஜு அவர்களின் பொறுப்பில் இவ்வேடு நல்லதோர் தமிழ் ஏடாக – ஏடுகளுகெல்லாம் முன்மாதிரி ஏடாக வெளிவருகின்றது.

ஆனால், இதில் வருத்தத்திற்குரிய விடயம் என்னவென்றால், இப்படியொரு இதழ் வெளிவருகிறது என்பதே இன்னும் பலரும் அறியாமல் இருக்கின்றனர்; இலவயமாக கிடைக்கும் இனியதோர் இதழைப் படிக்காமல் இருக்கின்றனர்.

‘புதிய உதயம்’ அரசுசார்ந்த செய்திகளை வழங்கும் அதே வேளையில், கல்வி, சமூகம், பொருளாதாரம், பெற்றோரியல், அறிவியல், சமயம், விளையாட்டு, சுகாதாரம், தமிழ்மொழி, தொழில்நுட்பம், சிறுகதை, கவிதை என பல்வேறு வகையான படைப்புகளைப் பாங்குடன் பரிமாறுகிறது.


தமிழ்ப்பள்ளிகள், இடைநிலை; உயர்நிலைப்பள்ளிகள், ஆசிரியர் பயிற்சிக் கழகங்கள், தமிழ்மொழிக் கழகங்கள், பொது இயக்கங்கள், பொது மக்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் இந்த இதழ் பயனாக அமையும் என்று உறுதியாகச் சொல்லலாம்.

குறிப்பாக, தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையில் தமிழைப் பயிலும் மாணவர்களுக்கு இவ்விதழ் பெரும் நன்மையை அளிக்கும்; அவர்களின் தமிழ் வாசிப்பிற்குத் துணை நிற்கும்; தமிழ்மொழி ஆற்றலை வளர்த்தெடுக்கும். இன்னும் சொல்லப்போனால் அவர்களின் கல்விக்கும் தேர்வுக்கும்கூட துணைநூலாகப் பயன்படும்.

‘புதிய உதயம்’ இதழ் நாடு முழுவதுமுள்ள தகவல் திணைக்களம் (Jabatan Penerangan), மாவட்டத் தகவல் அலுவலகம் (Pejabat Penerangan Daerah) ஆகிய இடங்களில் இலவயமாகக் கிடைக்கும்.

பள்ளி நிருவாகங்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், பொது இயக்கங்கள், இளைஞர் அமைப்புகள் ஆகிய தரப்பினர் இந்த இதழைப் பரப்பும் நல்ல பணியை விரைந்து செய்யலாம்.

இந்தச் செய்தியைப் படிக்கும் அன்பர்கள், உங்களுக்கு அருகிலுள்ள தமிழ்ப் பள்ளிகள் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், பொது இயக்கங்கள், இளைஞர் இயக்கங்கள் ஆகியோருக்கு அன்புகூர்ந்து தெரியப்படுத்துங்கள்.


தமிழ்மக்களின் பேராதரவு இருந்தால் அரசாங்கம் வெளியிடும் இந்த இலவய இதழ்.. இனியத் தமிழ்பரப்பும் இந்த ஏடு.. எல்லாரும் படிக்கும் வகையில் பேரளவில் வெளிவரும்; மீண்டும் பாதியிலே நின்றுவிடாமல் பலகாலம் தொடர்ந்து வரும்.

‘புதிய உதயம்’ இதழ் தொடர்பாக மேல் விவரம் பெறுவதற்கு:-
திருமதி பத்மா செல்வராஜு (ஆசிரியர்)
மின்னஞ்சல்:- pathma@inform.gov.my கைப்பேசி:- 019-2808526

‘புதிய உதயம்’ முகவரி:-
Ketua Pengarang, Bahagian Penerbitan Dasar Negara,
Jabatan Penerangan Malaysia, Tingkat 12 Barat, Wisma Sime Darby,
Jalan Raja Laut, 50350 Kuala Lumpur. Tel:03-2173 4400 samb.4655

Thursday, September 24, 2009

வருகின்ற 28.09.2009 அன்று பிற்பகல் 14 மணிக்கு யெனீவா புகையிரத நிலையம் தொடக்கம் ஐநா முன்றல் வரை தொடுக்கப்படவிருக்கும் மனிதச்சங்கிலி. தமிழ் இளையோர் அமைப


விடுதலை உணர்வும் வேட்கையும் கொண்ட மதிப்புக்குரிய சுவிஸ் வாழ் தமிழ் மக்களே. எமது இனம் பாவப்பட்டவர்களாய் பரிதாவப்பட்டவர்களாய் பாதுகாப்பில்லாதவர்களாய் அனாதைகளாய் அகதிகளாய் அடிமைகளாய் சிறீ லங்கா பயங்கரவாத இனவெறி அரசால் சிதறடிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகப்பெரும் தடுப்புமுகாம் என்று ஐனா அதிகாரிகளே வர்ணிக்கக்கூடிய மின்சாரம் பாட்சப்படுகின்ற முட்கம்பி வேலிக்கு நடுவில் எமது மக்கள் சிறைப்பிடிக்கப்பட்டு வதைகொள்ளப்படுகிறார்கள்.

அம் மக்களை விடுவிக்க வேண்டிய பாரிய பொறுப்பும் பணியும் புலம்பெயர் மக்களாகிய எம்மிடிம் தான் விடப்பட்டுள்ளது. வீரம் செறிந்த எமது விடுதலைப்போராட்டம் சந்தித்துள்ள இப் பின்னடைவானது தற்காலிகமானதே தவிர நிரந்தரமாகாது. கசப்புகளுக்கும் வெறுப்புக்களுக்கும் சோர்வுணர்வுகளுக்கும் அப்பாட் சென்று ஆயிரம் ஆயிரம் மாவீரர்களும் மக்களும் உதிரம் சிந்நி உரமேற்றிய விடுதலைப்பாதையை நாம் அனைவரும் அணி திரண்டு வருகின்ற தடைகளையெல்லாம்; உடைத்தெறிந்து முன்னோக்கி நகர்த்தவேண்டும். இன்று சிங்கள அரசாங்கமும் எமது எதிரிகளும் கண்டு பயப்படும் மாபெரும் புரட்சி கொண்ட மக்கள் சக்தியாக எமது தலைவன் எம்மை உருவாக்கியிருக்கிறார்.

ஆகவே எமது நேசத்துக்குரிய மக்களே மே 18 ஆம் திகதிக்கு முன் இருந்த எழுச்சியை விட தற்பொழுது தான் நாம் மிகவும் எழுச்சியாக இருக்க வேண்டும். மாற்றம் அடைந்துவரும் வெளிநாடுகளின் தமிழீழம் சார்ந்த நிலைப்பாட்டை எமது கனதியான போராட்டங்கள் மூலம் வலுவடையச்செய்தல் வேண்டும். இன்றைய காலகட்டம் என்பது புதிதாக போராட்டத்தில் தம்மை இணைத்துள்ள உலகெங்கும் வாழ் தமிழ் இளையோர்களுக்கு ஒரு சவாள் நிறைந்த காலகட்டம். வெளிநாட்டவர்களுக்கான அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்ற சமபொளுதில் தமிழ் மக்களுக்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதென்பதே அச் சவாள் ஆகும்.

இச் சாவள்களையெல்லாம் முறியடித்து இளையோர்களும் முதியோர்களுமாக சர்வ உலகமும் அதிரும் வண்ணம் கேளத சர்வதேசத்தின் காதுகள் கேட்கும்வரைக்கும் விடுதலைக்கான கொட்டொலிகளை ஓங்கி எழுப்ப வேண்டும். இன்றை இந்ந சுடுகாட்டு அமைதிக்கு ஒப்பான காலகட்டத்தை மீறி நாம் முன்னெடுக்கப்போகின்ற போராட்டங்களே தமிழனின் இருப்பை தீர்மாணிக்கப் போகின்றன அவையே அமையப்போகும் தமிழீழத் திருநாட்டின் காலத்தை வேகமாக்கப் போகின்றன.

மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கும் வெகுசனப் போராட்டங்கள் கண்டங்கள் கடந்து பற்றியெரியும் போதே சங்கர் தொட்டு முள்ளிவாய்க்கால் வரைக்கும் மடிந்தவர்களின் ஏக்கங்கள் தணியும். சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பின் எழுச்சிப்பிரகடண காலகட்டத்தில் சுவிஸ் தமிழர் பேரவையால் வருகின்ற 28.09.2009 அன்று பிற்பகல் 14 மணிக்கு யெனீவா புகையிரத நிலையம் தொடக்கம் ஐநா முன்றல் வரை தொடுக்கப்படவிருக்கும் மனிதச்சங்கிலியில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினராகிய உங்கள் பிள்ளைகள் உரிமையுடன் அழைக்கிறார்கள்.














வருகின்ற 28.09.2009 அன்று பிற்பகல் 14 மணிக்கு யெனீவா புகையிரத நிலையம் தொடக்கம் ஐநா முன்றல் வரை தொடுக்கப்படவிருக்கும் மனிதச்சங்கிலி. தமிழ் இளையோர் அமைப்பின் ஊடக அறிக்கை


Tuesday, September 22, 2009

ஈழ தாயின் அழுகுரல் கேட்கிறதா? ஏக்கம் புரிகிறதா?

ஈழப்போர், இறுதிப்போர், தீக்கோளங்கள் கொட்டித்தீர்த்தன. வானமே பிழந்து தீக்குண்டுகளும் வெடிமுழக்கங்களும் வன்னிமண்னை துவசம் செய்துகொண்டிருந்த நேரமது. அப்பாவி மக்களும் போராளிகளும் என்ன செய்வதென்னு புரியாமல் பின்வாங்கி பின்வாங்கி மிகக் குறுகிய ராணுவ வளையத்துள் மாட்டிக்கொண்டோம். சுரணடைந்தவர்களும் தப்பி ஓடியவர்களும் ராணுவத்தால் மனித வேட்டை நடாத்தப்பட்டுக்கொண்டிருந்தது. எங்கும் மரண ஓலம்! எங்கும் தமிழர் பிணங்கள். ஊழிகாலம் என்பார்களே அதுதான், அதேதான். ஈழத் தமிழர்களின் ஊழிகாலம். துமிழன் இரத்தமும் சதையும் வன்னிமண்ணில் சிதறிக்கிடந்தன. எத்தனையோ போர்க்கழத்தைப் படித்திரு;கலாம், பார்த்திருக்கலாம் ஆனால் இந்தக் கொடிய காட்சியை ஈழத் தமிழரைவிட யாரும் பார்த்திருக்க முடியாது.

போர் முடிந்தது. ஆனால் வேட்டுக்களின் சத்தம் ஓய்ந்தபாடில்லை. குடும்பங்கள் பிரிந்தன. உறவுகள் பிரிந்தன. எல்லோரும் தனித்தனியாய் தவித்து நின்றோம். என் கணவர் எங்கே தெரியாது, என் ஐந்து பிள்ளைகளில் மீதமுள்ள இரண்டு பிள்ளைகளைக் காணவில்லை. அவர்களை தேடிப்பார்க்கும் சூழ்நிலையும் அங்கு இல்லை. அவரவர் உயிரை அவரவர் காப்பதே கடமையாக்கப்பட்டுவிட்டது. ஆங்காங்கே கேட்கும் வேட்டுக்களுக்கு விளக்கங்கள் வெளியாகிக்கொண்டிருந்தது. ராணுவம் போராளிகள் என்று சந்தேகப்படுபவர்களை கூட்டம் கூட்டமாக அழைத்துச் சென்று சுட்டுத் தள்ளுகிறார்கள் என்ற செய்தி கேட்டு என் தலையில் இடி விழுந்தது போலானேன்.

ஏற்கனவே, போராளிகளாக மூன்று பிள்ளைகளைப் பறிகொடுத்து நிற்கும் எனக்கு அப்பாவிகளான மீதிப் பிள்ளைகளையும் பறிகொடுப்பதென்றால் எந்தத் தாயால் தாங்கிக்கொள்ள முடியும். ஆனாலும் ஒரு நப்பாசை, என் பிள்ளைகள் எங்கோ உயிருடன் இருக்கமாட்டார்களா என்று. ஆனாலும் அந்த ஆசையிலம் மண் விழுந்தது. கண்டேன் கண்டேன் அந்த ராணுவக் காடையன் என் பிள்ளைகளை அம்மணமாக்கி, கைகளை பிணைத்து, கண்களை கட்டி, குப்புறத் தள்ளி துப்பாக்கிக் குண்டுகளால் தலையை சிதறப்பண்ணி அதில் கொப்பளித்த இரத்தத்தால் எம் மண்ணே சென்னிற சேறான கொடுமையைக் கண்டேனடா. நெஞ்சு பதைத்தது, என் கருவறையே கலங்கி துடித்ததடா. நான் மட்டுமல்ல என்னைப்போல் எத்தனையோ தாய் தந்தையர் அழுது புலம்பித் தவித்தனர். என் அருகே இன்னொரு தாய் அழுகுரல்,

காவோலை நானிருக்க

குருத்தோலை சாய்ந்ததென்ன – எனக்கு

கொள்ளி போட நீயிருந்தாய் - உன்

தலையில் கொடு நெருப்பை கொட்டினரோ

அம்மா என அழைப்பாய் - ஏன்

உச்சி எல்லாம் குளிருமடா – நீ

ஊமையாய் போனாலும் மனமாறிப்போகுமடா

பிணமாய் போனாயே – உன்னை

என்ன சொல்லி நானாற

ஆண்டவன் தான் படைத்ததென்றால்

தமிழனுக்கு ஆண்டவனும் எதிரியடா

இப்போ அவனிடம் கை ஏந்த

எனக்கு தேவை ஏதும் இல்லையடா

ஒன்றுமட்டும் கேட்கலாம்

என்னையும் கொன்றுவிடு அதுபோதும்.

இப்படி ஆயிரமாயிரம் அழுகுரல். இப்படி ஒரு கொடூரம் எந்த மக்களுக்கும் எந்த நாட்டிலும் ஏற்பட்டுவிடக் கூடாது.

மிருகவதைக்கு எதிராக எத்தனை எத்தனைச் சட்டங்கள் சமூகசேவை நிறுவனங்கள் கருணை கொண்ட ஆர்வலர்கள் என உலகம் முழுவதும் உள்ள போது, ஈழத்தில் நடந்தேறும் மனித வதைகளை கண்டுகொள்ளாமல் பத்திரிகை அறிக்கையோடு கடமை முடிந்தது என நினைப்பவர்களை பார்க்கும் போது தான் வேதனையாக இருந்தது.

ஈழத்தில் தமிழன் உள்ளவரை சிறிலங்கா அரசு ஓயாது. தமிழன் ஒட்டுமொத்தமாக அழிந்தாலே ஒழிய இப்படி இன அழிப்பு தொடரும் என்பதில் யாருக்கும் ஐயப்பாடில்லை. அப்படியானால் இதற்கு தீர்வு தான் என்ன? உண்டு!

ஈழத் தமிழனே!

இனியாவது ஒன்றுபட மாட்டாயா? ஓரணியாய் திரளாயா. நீ ஒன்று சேர்ந்து ஆயுதத்தை கையிலெடு என்று சொல்லவில்லை. ஒன்றாய் சேர்ந்து சிந்தி, நிச்சயம் வழிபிறக்கும். எமது ஆரம்பம் முதல் இன்றுவரை கிடைத்த வாய்ப்புக்களை நீ கை நழுவ விட்டுவிட்டாய். அதன் விளைவதான் இப்போதைய இழிவும் அழிவும். இனியும் காலம் கடத்தி மீதித் தமிழனையும் காவுகொடுக்க காரணமாகிவிடாதே. என் மகன்களை என் மக்களை கொன்று குவித்தவனிடமே ஒரு நேர சோற்றுக்காக இந்த முட்கம்பி வேலிக்கிடையே கை ஏந்தி நிற்கிறேனடா. சுதந்திரம் கேட்டு போராடிய பிள் ளைகளை பெற்ற நான் ஒரு நேர வயிற்றுச் சோற்றுக்கு கையேந்தி அடிமையாக நிற்கிறேனடா! என்னைக் காப்பாற்று, எம் இனத்தைக் காப்பாற்று. நிம்மதியாக வாழ ஏதாவது வழியை தேடு. நீ ஆயுதத்தைக் கையாள தெரிந்த அளவுக்கு அரசியலை கையாளத் தெரிந்துகொள்ளவில்லையே. இன்றைய தோல்விக்கு இதுதான் மூலகாரணம்.

ஆயுதம்:- இது உன்னிடம் பலமாக உள்ளவரை நீயே ராஜா, நீயே மந்திரி, நீயே எல்லாமும். இது ஆயுததாரிகளுக்கு ஏற்படும் பலவீன மான பலம். ஏனென்றால் உன்னிடம் உள்ள பலமான ஆயுதத்தை விடவும் பலமிக்க ஆயுதம் எதிரியிடம் சென்றுவிட்டால், அவன் பலசாலியாகிவிடுவான் நீ அடிமையாக்கப்பட்டுவிடுவாய் என்பதை நீ ஏன் உணர மறுத்தாய். நீ ஆயுதத்தில் பலமாக உள்ளபோதே அரசியல் தீர்வுக்கான வழிமுறைகளை முன்னெடுக்காததே இன்றைய அவலத்திற்கு உண்மையான காரணம்.

யுத்தத்தை நிறுத்துவதற்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோதே தீர்வுக்கான முன்னெடுப்புகளை நீ முன்னெடுக்கத் தவறிவிட்டாய். உன் சகோதரர்களையும் அயலவர்களையும் உனக்கு எதிரியாக்கிக்கொண்டதும் அல்லாமல் அவர்களை எதிரிக்கு நண்பர்களாக்கிவிட்டது உனது அபரிமிதமான ஆயுத நம்பிக்கை.

முடிந்தவை முடிந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவையாவது நல்லவையாக தொடர சிந்தித்து செயல்படு. முதலில் ஈழத்தமிழனே ஒன்றுபடு! தோழ் கொடுக்கும் தோழனாய் உணர்வோடு ஒன்றுபட்டு சிந்தித்து செயல்படு வெற்றி கிட்டும். தோழ் கொடுக்க தோழர்கள் உண்டு தளர்ந்துவிடாதே, ஆதரவு தர இரத்த உறவு, அயலவர்கள் உண்டு! எழுந்து நில் உன்னால் முடியும் ஈழத் தமிழனே உன்னால் முடியும்.

எம் தாய் தமிழ் நாடே!

எமக்கொரு துன்பம் என்றால் உண்மையான உணர்வோடும் துடிப்போடும் களமிறங்கிப் போராடும் எம் இரத்த உறவுகளே, ஈழத் தமிழன் நிம்மதி பெருமூச்சு விட முடியும் என்றால், அதற்கு பெரும் பங்கு உங்களிடம்தான் உள்ளது. உங்களை நம்பித்தான் உலகத் தமிழர்கள் எல்லாம் ஏக்கப்பார்வையோடு காத்திருக்கின்றனர். உங்களுக்கு அறிவு கூறும் அளவுக்கு நான் அரசியல் அறிவு உள்ளவள் அல்ல. மனதிலுள்ள ஏக்கத்தின் வெளிப்பாடாகவே இதை கூறுகிறேன். எம் இளைஞர்களின் இந்த நிலைக்கு காரணம் சகோதரப்படுகொலை என்பதை யாரும் புறம் தள்ளிவிட முடியாது. அதேபோல் மிகுந் த அரசியல் சாணக்கியமும் உண்மையான உணர்வும் கொண்ட தமிழ்நாட்டின் தலைவர்கள் இருந்தும் ஈழத்தில் நடந்து முடிந்த பேரழிவையும் நடந்துகொண்டிருக்கும் தமிழர் அழிப்புகளையும் தடுக்க முடியவில்லையென்றால் அதற்கு உண்மையான காரணம், தாங்கள் ஒன்றுபடாமல் தனித் தனி க் கட் சிகளாக போராட்டம் நடாத்தியதே.

தமிழரைக் காக்க தமிழன் என்கிற ஒரு குடையின் கீழ் ஒன்றுபட்டு போராடாததே மத்திய அரசு செவிசாய்க்காததற்கு காரணம். நாம் வாழ்வில் ஒரு காலும் சாவில் ஒரு காலுமாக பேதலித்து நிற்கிறோம். எம்மைக் காப்பாற்றி வாழவைப்பீர்கள் என்று இன்னமும் முழுமனதுடன் நம்புகிறோம். மரணத்தறுவாயிலும் உங்கள் கைகள் உயராதா ஒன்றுபட்டு உயராதா என்கிற ஏக்கத்தோடு பார்த்துக் காத்துநிற்கிறோம். தங்களின் மேலான அரசியல் கொள்கைகளை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு, ஈழத் தமிழர்களைக் காக்க தா ங்கள் மேற்கொள்ளும் பெரும் அற்பணிப்பாக அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு ஒன்றுபட்டு எம்மை காக்க வழிசெய்யுங்கள். உங்களால் முடியும். உங்களால் மட்டும்தான் ஈழத்தமிழனுக்கு விடிவு பிறக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும் ஈழத் தாய்.

Monday, September 21, 2009

எனக்கு முடிவு கட்ட பழ.நெடுமாறன் கோஷ்டியினர் சதி :கொலைஞர்

இலங்கைத் தமிழர் விஷயத்தில் முதல்வரின் செயல்பாடுகள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இடையே கோபத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
3.50 லட்சம் தமிழர்கள் படும் துன்பத்திற்கு ராஜபட்ச மட்டும் காரணம் அல்ல; பிரதமர் மன்மோகன் சிங்கும், முதல்வர் கருணாநிதியும்தான் காரணம் என்று இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

இது குறித்து இலங்கைத் தமிழர்கள் பிரச்னையில், முதல்வரின் செயல்பாடுகள் குறித்து வெளிநாடு வாழ் தமிழர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளாரே? என்ற கேள்விக்கு பதிலளித்த முதல்வர்,

’’நெடுமாறன் கோஷ்டியினரின் உள்நோக்கத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

உண்மைக்கு மாறான தகவல்கள், நெடுமாறன் மூலம் வெளியிடப்பட்டிருக்கின்றன. எனக்கு ஒரு முடிவு கட்ட திட்டமிட்டு, அந்தப் பழியை உலகத் தமிழர்கள் யார் மீதாவது போட்டு விட்டு, தாங்கள் தப்பித்துக்கொள்ள, அந்தக் கோஷ்டியினர் முன்கூட்டியே திட்டமிட்டு செய்யும் பிரச்சாரம் என்று நான் கருத வேண்டியிருக்கிறது.

நெடுமாறன் போன்றவர்களுக்கு, ஜெயலலிதாவின் செயல்பாடுகள் தான் பிடிக்கும். ஜெயலலிதாவைப் போல், அவரைப் பிடித்து குண்டர் சட்டத்திலோ அல்லது பொடா சட்டத்திலோ மாதக் கணக்கில் சிறையில் தள்ளினால், அதுதான் சிறந்த நடவடிக்கை என்பர்.

எப்படியிருந்தாலும், 'வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்' என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

செய்தி : முகபுத்தகம்(பெச்பூக்) நந்தா தமிழ்

தமிழ்ச் செம்மொழிக்கு இருக்கின்ற 11 தகுதிகள்

1.தொன்மை (Antiquity)
2.தனித்தன்மை (Individuality)
3.பொதுமைப் பண்பு (Common Characters)
4.நடுவு நிலைமை (Neutrality)
5.தாய்மைத் தன்மை (Parental Kinship)
6.பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு (Finding expression in the culture art and life experiences of the civilized society)
7.பிறமொழிக் கலப்பில்லாத் தனித்தன்மை (Ability to function independently without any impact or influence of any other language and literature)
8.இலக்கிய வளம் (Literary prowess)
9.உயர்சிந்தனை (Noble ideas and ideals)
10.கலை, இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு (Originality in artistic and literary expressions)
11.மொழிக் கோட்பாடு (Linguitik principles)



செம்மொழி என்றால் அனைத்து வகையாலும் செம்மையாக அமைந்த மொழி என்று பொருள்படும். இதனை ஆங்கிலத்தில் Classical Language என்பர். செம்மொழி என்பது மிகத் தொன்மையும் நீண்ட நெடிய வரலாறுப் பின்னணியும் கொண்டதாக இருக்கும் என்பது பொதுவான கருத்து. அந்த வகையில், உலகின் உலகின் தொன்மை மொழிகளாக ஆறு மொழிகளை ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் 'யுனெசுக்கோ' அறிவித்துள்ளது. அவை, தமிழ், சமற்கிருதம், சீனம், இலத்தீனம், கிரேக்கம், இப்ரூ ஆகியன.

இவற்றுள், சமற்கிருதம் பேச்சு மொழியாக இல்லை; 'மந்திரங்கள்' என்ற உருவில் மட்டுமே இருக்கிறது. இலத்தீன், இப்ரூ மொழிகள் வழக்கொழிந்துவிட்டது. இசுரேலிய அரசு ஏசுபிரான் பேசிய இப்ரூ மொழிக்கு மீண்டும் உயிரூட்டி வருகிறது. கிரேக்க மொழியும் கிட்டதட்ட அழிவின் எல்லையைத் தொட்டுவிட்டு இப்போது மறுவாழ்வு பெற்று வருகிறது. சீன மொழியோ பட எழுத்து அமைப்பில் அமைந்தது. ஆதலால், மாந்த உள்ளுணர்வுகளை சீன மொழியால் மிகத் துள்ளியமாக வெளிப்படுத்த முடியாது என்பது மொழியறிஞர்கள் கருத்து.

ஆனால், சிறந்த இலக்கிய வளம், செம்மாந்த இலக்கண அரண், செறிவான விழுமியம், பொதுமை மரபு, உயரிய சிந்தனை, பாரிய சொல்வளம், வரலாற்றுப் பின்னணி, தனித்தியங்கும் மாண்பு, அழிவில்லா வாழ்வு, காலத்திற்கேற்ற புதுமை என பல வகையிலும் சிறப்புபெற்றிருக்கும் ஒரே மொழி...

அன்று தாம் வாழ்ந்த காலத்தில் பிறமொழிகளோடு வளமாக வாழ்ந்து; இன்று தன்னோடு வாழ்ந்த மொழிகள் பல அழிந்த பின்பும்கூட இன்னும் வளத்தோடு வாழுகின்ற ஒரே மொழி... நம்முடைய தமிழ்மொழிதான்!

தமிழ்ச் செம்மொழியின் தகுதிகள்

ஒரு மொழியைச் செம்மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டுமெனில் அதற்கு பதினொரு (11) தகுதிப்பாடுகள் இருக்க வேண்டும் என்று மொழியியல் வல்லுநர்கள் வரையறை செய்துள்ளனர். இந்தப் 11 தகுதிப்பாடுகளையும் உருவாக்கியவர்கள் மேலை நாட்டு மொழி அறிஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் பழம்பெரும் மொழிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள எந்த ஒரு மொழிக்கும் செம்மொழிக்குரிய 11 தகுதிகளும் முழுமையாக இல்லை. சமற்கிருதத்திற்கு 7 தகுதிகளும், இலத்தின், கிரேக்க மொழிகளுக்கு 8 தகுதிகளும் மட்டுமே உள்ளன என்பது அறிஞர்கள் கூற்று.

ஆனால், என்ன ஒரு வியப்பு என்றால், நம் அன்னைத் தமிழுக்கு மட்டுமே செம்மொழித் தகுதிப்பாடுகள் பதினொன்றும் முழுமையாக உள்ளது. மேல்நாட்டு வல்லுநர்கள் வகுத்த மொழித் தகுதிப்பாட்டுக்கு நம்முடைய தமிழ்மொழி முற்றும் முழுவதுமாக ஒத்துப் போவது மிகப்பெரிய வரலாற்று உண்மையாகும்.

இனி, தமிழ்ச் செம்மொழிக்கு இருக்கின்ற அந்தப் 11 தகுதிகளைக் காண்போம்:-

1.தொன்மை (Antiquity)
2.தனித்தன்மை (Individuality)
3.பொதுமைப் பண்பு (Common Characters)
4.நடுவு நிலைமை (Neutrality)
5.தாய்மைத் தன்மை (Parental Kinship)
6.பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு (Finding expression in the culture art and life experiences of the civilized society)
7.பிறமொழிக் கலப்பில்லாத் தனித்தன்மை (Ability to function independently without any impact or influence of any other language and literature)
8.இலக்கிய வளம் (Literary prowess)
9.உயர்சிந்தனை (Noble ideas and ideals)
10.கலை, இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு (Originality in artistic and literary expressions)
11.மொழிக் கோட்பாடு (Linguitik principles)

இப்படி 11 தகுதிகளும் முழுமையாக பெற்றுள்ள தமிழ் மொழியைத் தாய்மொழியாகப் பெற்றதற்காக ஒவ்வொரு தமிழரும் பெருமையும் பீடும் கொள்ள வேண்டும். மொழியின் பெருமையை; வரலாற்றை; பாரம்பரியத்தை அறிந்து உணர்ந்துகொண்டால் தமிழர்கள் உலக இனங்களுக்கு இணையாக நிமிர்ந்து நிற்க முடியும் என்பது திண்ணம்.
தனித்த விழுமியங்களோடு உலகில் உய்வதற்கும் வாழ்வில் உயர்வதற்கும் தமிழர்களுக்குப் பெரும் தன்னம்பிக்கையத் தரவல்லது தமிழ்மொழி ஒன்றே. தமிழை முன்னெடுத்தால் ஒழிய தமிழர் வாழ்வு வளம் பெறாது. தமிழே தமிழரின் முகவரி என்பதை ஒவ்வொரு தமிழரும் உணர்ந்து தெளிய வேண்டும்.

Sunday, September 20, 2009

தடைகளை உடைப்போம் Mass protest planned in Germany.

** GERMAN members only! **

தடைகளை உடைப்போம்
Mass protest planned in Germany.

Date: 27/09/09, Sunday
Time: 10.30am
Venue: Landtag NRW Duesseldorf

For more info click on the following links!

http://www.youtube.com/watch?v=0QabPOVh_dQ&feature=player_embedded

http://www.facebook.com/event.php?eid=163938179497&ref=mf

We Tamils have to gather as one and show the world that we haven't given up on our Eelam struggle !!

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்! ♥
சுஜாதாவின் சிறுகதைகள் பதிவிறக்க (Download)
சுஜாதாவின் சிறுகதைகள் பதிவிறக்க (Download)

சுஜாதா (மே 3, 1935 - பெப்ரவரி 27, 2008) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர் பல வாசக ர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா.

Saturday, September 19, 2009

ஆறாவது உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு

இடம்: கோலாலம்பூர் மலேசியா
காலம்: புரட்டாதி 9, 10, 12 ( September 25, 26 and 27 th 2009)



முழுமையான விபரங்களை பார்க்க இணைப்பில் சொடுக்கவும்
ஆறாவது உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு

Friday, September 18, 2009

1மலேசியா வலைப்பதிவில் தமிழ்:- மாண்புமிகு பிரதமருக்கு நன்றிமடல்

மதிப்பிற்கும் மாண்பிற்கும் உரிய,
மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் இரசாக் அவர்களே,

‘ஒரே மலேசியா’ என்ற உயரிய கோட்பாட்டினைப் பெருமையோடு மதித்துப் போற்றும் மலேசிய மக்களில் ஒருவனாக, மிகுந்த நெகிழ்ச்சியோடும் நன்றி உணர்ச்சியோடும் இந்த மடலை எழுதுகின்றேன்.

என்னுடைய மன நெகிழ்ச்சிக்கான காரணத்தை முதலில் தங்களுக்குச் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

இன்று (16.9.2009), மலேசியா உருவாக்கம் பெற்ற 46ஆம் ஆண்டு வரலாற்று நாள். சபா, சரவா ஆகிய இரு மாநிலங்களும் இணைக்கப்பட்டு மலாயா என இருந்த நம் நாடு மலேசியாவாக உருப்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். மலேசியர்கள் அனைவரும் பெருமையுடன் நினைத்துப்பார்க்க வேண்டிய ஒற்றுமைத் திருநாள்.

இதே நாளை, மலேசியாவின் இன்னுமொரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகத்தான் நான் இப்போது பார்க்கிறேன்.

ஆம், டத்தோஸ்ரீ அவர்களே,
இன்றுதான், தங்களின் ஒரே மலேசியா வலைப்பதிவு முதன்முறையாக எங்கள் அழகுதமிழில் உலாவர தொடங்கியிருக்கிறது. ஒரே மலேசியா வலைப்பதிவில் ஓங்குபுகழ் தமிழுக்கும் அரியணை கிடைத்திருக்கிறது; ஆங்கிலம், மலாய், சீனம் ஆகிய மொழிகளில் மட்டுமே இயங்கிய ஒரே மலேசியா வலைப்பதிவு இன்றுதொடங்கி எங்கள் அன்னைமொழியாம் அழகார்ந்த செந்தமிழ் பேசுகிறது. அதைக்கண்டு, எங்கள் உள்ளமெல்லாம் சிலிர்க்கிறது; மகிழ்ச்சி.. மகிழ்ச்சி என ஆர்ப்பரிக்கிறது.

மாண்புமிகு டத்தோஸ்ரீ அவர்களே,
தாங்கள் அறிமுகப்படுத்திய ஒரே மலேசியா கொள்கையில் இதுவோர் முகமையான விடயமாகும். தொடக்கத்தில் ஒரே மலேசியா வலைப்பதிவில் தமிழ்மொழி இல்லாததைக் கண்டு மலேசியத் தமிழர்கள் கொஞ்சம் துணுக்குற்றுப் போயினர். இன்னும் சொல்லப்போனால், அதிர்ச்சியும் அடந்திருந்தனர்.

தமிழ் மக்களின் இந்த மனக்குறை தமிழ் நாளிகைகள், தமிழ் வலைப்பதிவுகள் முதலானவற்றின் வழியாக தங்கள் மேலான பார்வைக்கு முன்வைக்கப்பட்டது. இதற்கோர் நல்ல தீர்வைச் தாங்கள் கண்டிப்பாகச் செய்வீர்கள் என மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.

ஒரே மலேசியா வலைப்பதிவில் தமிழுக்கும் இடம்வேண்டும் என்கிற தமிழ் மக்களின் எதிர்பார்ப்பைப் புரிந்துகொண்டு இப்போது எங்கள் இன்னுயிர்த் தமிழையும் இணைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு மகிழ்வும் பெருமையும் எய்துகின்றோம்.

எங்களின் உணர்வுகளுக்கும் நம்பிக்கைக்கும் மதிப்பளிக்கும் வகையில் தாங்கள் செய்திருக்கும் இந்த மேன்மையான செயலைக் கண்டு, தங்களுக்கு இருகரம்கூப்பி நன்றி சொல்வதைக் கடமையாகவும் கட்டயமாகவும் கொள்கின்றோம்.

மலேசியப் பிரதமராகிய தங்களின் வலைப்பதிவில், நாட்டின் மற்றைய மொழிகளுக்கு இணையாக தமிழையும் இடம்பெறச் செய்திருப்பதை எங்கள் தமிழ்கூறு நல்லுலகம் ஒரு வரலாற்றுச் சாதனையாகவே பதிவுசெய்துகொள்ளும் என நம்புகிறேன்.

மாண்புமிகு டத்தோஸ்ரீ அவர்களே,
இனி, தங்களின் சீரிய சிந்தனைகளும் ஏற்றமிகு ஏடல்களும் எங்களுக்கு இனியத் தமிழ் வழியிலேயே கிடைக்கப்பெறும். அவற்றை ஆழந்து உணர்ந்துகொண்டு தங்களின் வழிகாட்டுதலில் செயல்படுவதற்கு அணியமாக இருக்கின்றோம் என்பதைத் தெரிவிக்க விழைகிறேன்.

இறுதியாக, தமிழ் மக்களின் உள்ளத்துக்கு மிக நெறுக்கத்தில் இருக்கும் தமிழுக்கு ஒரே மலேசியா வலைப்பதிவில் இடம்கொடுத்ததன் பயனாகத் தாங்கள் தமிழ் மக்களின் உள்ளங்களில் நீங்கா இடத்தைப் பிடித்திருக்கிறீர்கள் என்று சொன்னால் மிகையில்லை. இதுபோலவே, எங்கள் மக்கள் உள்ளங்களில் இன்னும் தேங்கிக்கிடக்கும் பல்வேறு குறைபாடுகளுக்கும் குழப்பங்களுக்கும் படிப்படியாகத் தீர்வுகளைக் கண்டு தமிழர்கள் வாழ்வில் நம்பிக்கை ஒளி ஏற்றிவைப்பீர்கள் என மனதார நம்புகிறேன். மீண்டும் நெஞ்சார்ந்த நன்றியினைச் சொல்லி விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்.

அன்புடன்,
மலேசியத் தமிழர்கள் சார்பில்,
திருத்தமிழ் ஊழியன்,
சுப.நற்குணன்.

தொடர்பான செய்தி:-
1மலேசியா வலைப்பதிவு: மாண்புமிகு பிரதமருக்கு ஓர் அன்புமடல்.

பி.கு:- மாண்புமிகு பிரதமருக்கு நன்றி சொல்ல வேண்டியது தமிழர் அனைவருடைய கடமையாகும். உங்கள் நன்றியறிதலைத் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்.

ஒரே மலேசியா வலைப்பதிவைத் தமிழில் படிக்க

இங்கே சொடுக்கவும்

Friday, September 04, 2009

ரத்தவெறிபிடித்த சிங்களர்களால் சிதைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்கள்: மீண்டும் அதிர்ச்சியூட்டும் படங்கள்

e4இலங்கையில் உள்ள ராணுவ வதை முகாமில் தமிழ் இளைஞர்களை கடத்திச் சென்று நிர்வானமாக்கி, தலையில் சுடும் காட்சிகளை லண்டனில் உள்ள சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டது.

இந்நிலையில் இலங்கை இராணுவம் ஈழத்தமிழர்களை கொன்று பெண்களையும் இளைஞர்களையும் முழுநிர்வாணமாக்கி புகைப்படங்களை எடுத்திருக்கும் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இப்படங்கள் எப்போது எடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை. விமான ஓடுபாதையில் இப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது.

இது அனுராதபுரம் வான் தாக்குதலாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இறந்த போராளியின் மீது தனது பூட்ஸ் காலை வைத்து இலங்கை இராணுவம் புகைப்படம் எடுத்துள்ளது.

இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தவேண்டாம். ஒரு குழிக்குள்ளாவது போட்டு புதைத்திருக்கலாம். அப்படி செய்யாமல் காக்கா,குருவி கொத்தித்தின்ன அப்படியே போட்டு வைத்திருக்கிறார்கள்.

ஆனால் இறந்த உடலத்தை நிர்வானமாக்கிப் பார்க்கும் சாக்கடைப் புத்தி உலகிலேயே சிங்கள இனத்திற்கு மட்டும் தான் இருக்கும் என்று ஈழ ஆதரவாளர்கள் கொந்தளிக்கிறார்கள்.

விடுதலைப் புலிகளுக்கு யப்பான் நீர்மூழ்கி கப்பல் அமைக்க உதவி

2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆழிப்பேரலையினால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட ஜப்பானிய நிபுணர்களின் குழு ஒன்றே நீர்மூழ்கிக் கப்பல்களைப் பயன்படுத்துவதற்கான சுரங்கப்பாதை ஒன்றைக் கட்டியமைப்பதற்கான உதவிகளைச் செய்தது என கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளேடு ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.